For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில் ஈவ் டீசிங் செய்த வாலிபர் கைது
சென்னை:
சென்னையில் இளம் பெண்ணை ஈவ் டீசிங் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரை லூக்காஸ் என்ற வாலிபர் அடிக்கடி தெருவில்போகும்போதும், வரும்போதும் கிண்டல் செய்து வந்துள்ளார்.
லட்சுமியை பெயர் சொல்லி அழைத்துப் பாட்டுப் பாடி கிண்டலடிப்பதே லூக்காஸின் வேலையாகப் போய் விட்டது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த லட்சுமி பொங்கி எழுந்தார். அமைதியாக போய் குமரன் நகர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீஸார் மாறுவேடத்தில் லட்சுமியைப் பின் தொடர்ந்தனர். வழக்கம் போல கலாய்க்க ஆரம்பித்த லூக்காஸைலபக்கென்று போலீசார் அள்ளிக் கொண்டு ஸ்டேஷனுக்குக் கொண்டு போயினர்.
Comments
Story first published: Monday, November 26, 2001, 5:30 [IST]