For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஞ்சிபுரம் சம்பவம்: விஷச் சாராயத்தில் இருந்தது எத்தனால்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காஞ்சிபுரம் அருகே விஷச் சாராயம் குடித்த அனைவரும் எத்தனால் அதிகம் கலந்த மதுவையேபயன்படுத்தியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே தின்னம்பூண்டி என்ற இடத்தில் மதுக் கடை ஒன்றில் கள்ளச்சாராயத்தை சிலர் பருகினர்.

இதில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 19 பேர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து மயங்கி விழுந்த 19பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் இன்னும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லை என்று டாக்டர்கள்தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மதுக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X