For Daily Alerts
Just In
காஞ்சிபுரம் சம்பவம்: விஷச் சாராயத்தில் இருந்தது எத்தனால்
சென்னை:
காஞ்சிபுரம் அருகே விஷச் சாராயம் குடித்த அனைவரும் எத்தனால் அதிகம் கலந்த மதுவையேபயன்படுத்தியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே தின்னம்பூண்டி என்ற இடத்தில் மதுக் கடை ஒன்றில் கள்ளச்சாராயத்தை சிலர் பருகினர்.
இதில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 19 பேர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து மயங்கி விழுந்த 19பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் இன்னும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லை என்று டாக்டர்கள்தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மதுக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Tuesday, November 27, 2001, 5:30 [IST]