ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி வகுப்பு
சென்னை:
காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் பெண்களின் குறைகளை முறையாக தீர்ப்பதற்கு வகை செய்யும் நிகர்நிலை பயிற்சி வகுப்பு சென்னையிலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை)தொடங்கப்பட்டது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பி.சங்கர் இந்த பயிற்சி வகுப்பைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர்பேசுகையில்,
காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் பெண்களின் குறைகளைத் தீர்த்து வைக்க இந்த பயிற்சி வகுப்புமிகவும் உதவியாக இருக்கும்.
முதல் கட்டமாக 20 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதிலும்80,000 காவலர்களுக்கு இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
காவலர் பயிற்சிக் கல்லூரி டிஜிபி கணபதி பேசுகையில், தர்மபுரி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் பெண்சிசுக் கொலை அதிக அளவில் உள்ளது. அதைத் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த மாவட்டங்களில் பெண்கள் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர். இந்த நிலை மாற்றப்படவேண்டும்.
சென்னையில் இதுவரை 1,400 காவலர்களுக்கு நிகர் நிலை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. பிறமாவட்டங்களில் 3,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
பயிற்சி முகாமில் டிஜிபி நெய்ல்வால், சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.