For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஸ் ஸ்டிரைக்கை சட்டவிரோதமாக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போக்குவரத்துத் ஊழியர்களின் போராட்டத்தை சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 20 சதவீத போனஸ் வழங்கக் கோரி போக்குவரத்துத் தொழிலாளர்கள்,16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போக்குவரத்துத் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி,மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் சூர்யபிரகாஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று (திங்கள்கிழமை) தலைமைநீதிபதி சுபாஷன்ரெட்டி, நீதிபதி சிவசுப்ரமணியம்ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வந்தது.

மனுக்களை விசாரித்த நீதிபதிகள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டதால் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X