For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை-பெங்களூர் இடையே சிறப்பு ரயில்
சென்னை:
சென்னையிலிருந்து பெங்களூருக்கு டிசம்பர் 1ம் தேதி சிறப்பு ரயில் விடப்படுகிறது.
சென்னை-பெங்களூர் மார்க்கத்தில் ரயில்களில் அதிக கூட்டம் இருப்பதால் வரும் டிசம்பர் 1 ம் தேதி சிறப்பு ரயில்விட தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 1ம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.15மணிக்கு பெங்களூரை சென்றடையும்.
பின்னர் மறு மார்க்கத்தில் டிசம்பர் 2ம் தேதி இரவு 11.30 மணிக்கு பெங்களூரிலிருந்து கிளம்பி அடுத்த காலைசென்னையை வந்தடையும்.
இன்று (புதன்கிழமை) இந்த ரயிலில் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, November 28, 2001, 5:30 [IST]