For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஷச் சாராயம் விற்ற 3 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

கடலூர் அருகே விஷச் சாராயம் குடித்து 20 பேர் இறந்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நத்தம் மற்றும் அருங்குணம் கிராமங்களைச் சேர்ந்த சில விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஒரு மதுக்கடையில்தான் சாராயம் வாங்கிக் குடித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 3 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்குப் போராடிவருகின்றனர்.

இதற்கிடையே பாண்டிச்சேரியிலிருந்து சாராயம் வாங்கி வந்த முருகன், சாராயத்தை விற்பனை செய்த கேசவன்,அனந்தாயி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சாராய விற்பனையில் ஈடுபட்ட சின்னப் பொன்னு என்பவரும் இச்சாராயத்தைக் குடித்து இறந்து விட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது. அவரது மகன்தான் கைது செய்யப்பட்டுள்ள முருகன் ஆவார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X