ஜனவரி மாதம் காங்கிரசில் இணைகிறார் வாழப்பாடி
டெல்லி:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி ஜனவரி மாதம் காங்கிரசில் இணைவதாக, காங்கிரஸ்தலைவி சோனியாவிடம் தெரிவித்தார்.
வாழப்பாடி ராமமூர்த்தி தனது கட்சியை காங்கிரசில் இணைக்கப் போவதாக முன்பே அறிவித்திருந்தார். இதுகுறித்துமுடிவெடுக்க தனது கட்சியின் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தின் முடிவில்காங்கிரஸ் கட்சியில் இணைய ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று (வியாழக்கிழமை) டெல்லி சென்ற வாழப்பாடி, அங்கு அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித்தலைவி சோனியா காந்தியைச் சந்தித்தார்.
அவரிடம் தமது கட்சி காங்கிரசில் இணையப் போவதாகவும், ஜனவரி மாதம் சென்னையில் நடக்கும் இணைப்புவிழாவில் சோனியாவும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு சோனியாவும் சம்மதித்தார். இந்தச் சந்திப்பின் போது, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரமேஷ்சென்னிதலாவும் உடன் இருந்தார்.
மதுரை அல்லது திருச்சியில் இதற்கான இணைப்பு விழா நடைபெறும் என்று தெரிகிறது.