எய்ட்ஸ் நோயாளிகள்: 10 பேரில் ஒருவர் இந்தியர்
நியூயார்க்:
உலகம் முழுவதும் "எய்ட்ஸ்" தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மேலும் மனித குல வரலாற்றில் இதுவரை இல்லாதஅளவிற்கு மிகப் பெரிய அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நோயான "எய்ட்ஸ்" இருப்பதைக் கண்டுபிடித்துஇன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
சராசரியாக உலகில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 10 பேரில் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார்.
மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா ஆகிய நாடுகளில் தான் இந்த நோய்வேகமாப் பரவி வருகிறது. இந்த நாடுகளில் இந்த ஆண்டு மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய்இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நைஜீரியா, தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்குஇலவச மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் இந்த ஆண்டு மட்டும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ள 10,000 இளைஞர்களுக்கும், 5,000குழந்தைகளுக்கும் பொதுவான நோய் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்நாட்டில்எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல தாய்லாந்து நாட்டிலும் மிகக் குறைந்த செலவில் அதாவது ரூ.34 செலவில் பொது சிகிச்சை அளிக்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் உள்ள எய்ட்ஸ் நோயாளிகள் அதிக பணம் செலவழித்து சிகிச்சை செய்து கொள்ளமுடியாத நிலையில் இருக்கிறார்கள். இதற்காக இந்த அரசுகள் இவ்வாறு குறைந்த செலவில் சிகிச்சைத் திட்டங்களைத்தீட்டியுள்ளன.