For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஞ்சிபுரம் கள்ளச் சாராயம்: 3 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே அச்சரப்பாக்கத்தில் கடந்த திங்கள் கிழமை ஏற்பட்ட விஷச்சாராய சாவுகளுக்குக் காரணமான 3பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே கடந்த திங்கள்கிழமை கள்ளச்சாரயம் குடித்த 2 பேர் பரிதாபமாகபலியானார்கள். மேலும் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராயம் விற்ற ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் சம்பந்தப் பட்ட மேலும் 4 பேரைப்போலீசார் தேடிவந்தனர். இவர்களில் 3 பேரை இன்று (சனிக்கிழமை) கைது செய்தனர்.

மொரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத் தலைவரும் பாட்டாளி மக்கள் கட்சிப் பிரமுகருமான சங்கர்தலைமறைவாகியுள்ளார். அவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மருத்துவமனையில் ராமதாஸ்:

இதற்கிடையே கடலூரில் கள்ளச் சாராயம் குடித்து உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

பின்னர் நிருபர்களிடம பேசுகையில், கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத அரசு உடனடியாக பதவி விலகவேண்டும் என்றார்.

ஆனால், இவரது கட்சிக்காரர் தான் காஞ்சிபுரம் கள்ளச் சாராய விவகாரத்தில் தேடப்பட்டு வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X