For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஞ்சிபுரம் சம்பவம்: சாராயத்தில் சயனைடு

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

சாராயத்தில் சயனைடு விஷம் கலந்து கொடுக்கப்பட்டதால் சாராயம் குடித்தவர்கள் இறந்துள்ளதாக போலீஸ்விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் கடந்த திங்கள்கிழமை விஷச்சாராயம் குடித்தால் 3 பேர் பலியானார்கள்.இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சாராயம் விற்ற 4 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

மேலும் மொரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகருமான சங்கர் என்பவரைபோலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக சாராயத்தில் சயனைடு கலந்துகொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் இறந்தவர்களின் உடலைப் பரிசோதனை செய்தபோது, சாராயத்துடன் சயனைடு விஷமும்கலந்திருந்ததாக போஸ்ட்மார்ட்டம் அறிக்கையும் தெரிவித்துள்ளது.

இந்ச சம்பவம் தொடர்பாக 5 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X