For Quick Alerts
For Daily Alerts
Just In
விடிய விடிய சடலங்கள் அடக்கம்
பண்ருட்டி:
பண்ருட்டி விஷச் சாராயச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றதையடுத்து,சம்பவம் நடந்த கிராமங்களில் விடிய விடிய சடலங்கள் புதைக்கப்பட்டன.
இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 170 பேர்களில், 23 பேருடையஉடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
ஒருவர் பின் ஒருவராக இறந்து கொண்டே இருந்ததால், சம்பவம் நடந்த கிராமங்களில் விடிய விடிய மரண ஓலமும்,ஒப்பாரிச் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தன.
இறந்தவர்களின் உடல்கள் அனைத்துக்கும் இறுதிச் சடங்குகள் நடந்ததோடு அவை இரவோடு இரவாகபுதைக்கப்பட்டன.
இந்த விஷச் சாராயத்தைக் குடித்தவர்களில் 50 பேருக்குக் கண் பார்வை பறிபோயுள்ளது.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]