ராமர் கோவில் விவகாரம்: பா.ஜ.கவுக்கு திமுக எதிர்ப்பு
சென்னை:
உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் வருவதால் ராமர் கோவில் பிரச்சனையை பெரிதாக்கி ஆதாயம் தேட பா.ஜ.க. முயலக்கூடாது என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
பா.ஜ.க.-திமுக இடைய உறவு வேகமாக சீர்குலைந்து வரும் நிலையில் கருணாநிதியின் இந்தக் கருத்து மிகுந்தமுக்கியத்துவம் பெறுகிறது.
வரும் உத்தரப் பிரதேச தேர்தலுக்காக பா.ஜ.க. வெளியிடவுள்ள தேர்தல் அறிக்கையில் அயோத்தியில் ராமர்கோவில் விரைவில் கட்டப்படும் என உறுதியளிக்கப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து பா.ஜ.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் திமுக தலைவர் கருணாநிதியிடம் நிருபர்கள் இன்றுகேட்டனர். இதற்கு பதிலளித்த கருணாநிதி,
ராமர் கோவில் விவகாரம் இப்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதனால், இந்தப் பிரச்சனையை தேர்தல்ஆயுதமாக பா.ஜ.க. பயன்படுத்தக் கூடாது. இது குறித்து உத்தரப் பிரதேச பா.ஜ.க. முதல்வர் ராஜ்நாத் சிங் கூறி வரும்கருத்துக்களுக்கும் அத்வானி, பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் கருத்துக்களுக்கும் வித்தியாசம் உள்ளது என்றார்கருணாநிதி.