For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ளச் சாராய சாவுகளுக்கு போலீஸ் தான் காரணம்: வீரமணி குற்றச்சாட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கள்ளச்சாரய சாவுகளை தடுக்க மீண்டும் தமிழக அரசே கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும் என்று திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்ருட்டி அருகே கள்ளச்சாரயம் அருந்தி 52 பேர் இறந்தது மிகவும்வேதனைக்குறியது.

எந்த ஆட்சியாக இருந்தாலும் சாராயச் சாவுகள் வழக்கமாகி விட்டது. இதற்கு காவல்துறை வாங்கும் மாமூல் தான்காரணம்.

இதை தடுக்க இரண்டு வழிகள் உள்ளன.ஒன்று இது போன்ற சம்பவம் நடக்கும் மாவட்டத்தில் உள்ள அனைத்துகாவல் துறை அதிகாரிகளின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், பதவி நீக்கம் செய்யவும் தனி சட்டம்கொண்டு வர வேண்டும்.

மற்றொன்று அரசே கள்ளுக்கடைகளை திறக்கவேண்டும்.

இதனால் சாரயசாவுகள் குறைவதோடு அரசுக்கும் அதிக வருமானம் கிடைக்கும். அரசு இதைப்பற்றி துணிந்துமுடிவெடுக்க முன் வரவேண்டும் என்று கி.வீரமணி அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X