For Daily Alerts
Just In
கோட்டையில் தொடர்கிறது அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை:
சென்னை அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக கோட்டை வளாகத்தில்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசு ஊழியர்களின் சலுகைகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது.
இது அரசு ஊழியர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதிலும் ஆங்காங்கேபோராட்டம் நடந்து வருகிறது.
தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை வளாகத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக அவர்கள் ஆர்ப்பாட்டம்நடத்தி வருகிறார்கள்.
இன்றும் (செவ்வாய்க்கிழமை) அவர்களுடைய ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. பிற்பகல் மதிய உணவுஇடைவேளையின்போது திரளான அரசு ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் அரை மணிநேத்திற்குப் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]