For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜினாமா செய்யத் தயார்: பன்னீர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டான்சி மற்றும் கொடைக்கானல் ஓட்டல் வழக்குகளில் ஜெயலலிதா விடுதலையடைந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்கும் பொருட்டு எந்த நேரத்திலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யத்தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று (செவ்வாய்க்கிழமை) கூறினார்.

ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்து சொல்வதற்காக போயஸ் கார்டனுக்கு வந்த பன்னீர்செல்வம் நிருபர்களிடம்கூறியதாவது:

தர்மத்திற்கு எதிராகச் சோதனைகள் வரும். இறுதியில் தர்மம் வெல்லும் என்று ஏற்கனவே பலமுறை நான் கூறிவந்துள்ளேன். இப்போது தர்மம் வென்றுள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் அதிமுகவினருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளதைப் போலவே, இப்போதும்தீர்ப்பு வெற்றிகரமாக அமைந்துள்ளது.

இது அதிமுகவுக்கு அளிக்கப்பட்ட மற்றொரு வெற்றி.

ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு வசதியாக நான் எப்போது வேண்டுமானாலும் என்பதவியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளேன் என்றார் பன்னீர்செல்வம்.

அமைச்சர் வளர்மதி கூறுகையில், அம்மா (ஜெயலலிதா) அரசியலுக்கு வந்தது முதல் அவருக்கு வெற்றி தவிர வேறுஎதுவுமே வந்ததில்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X