For Daily Alerts
Just In
ஜெ.க்கு வாசன் வாழ்த்து
சென்னை:
டான்சி வழக்கிலிருந்து விடுதலையான ஜெயலலிதாவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தனி நீதிமன்றத் தீர்ப்பு வெளியானபோது, "இது இறுதித் தீர்ப்பு அல்ல, உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம்.அப்போது வரும் தீர்ப்பே இறுதியானது" என்று மக்கள் தலைவர் மூப்பனார் கூறியிருந்தார்.
இப்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து விடுதலையாகியுள்ள ஜெயலலிதாவுக்கு என் சார்பிலும், தமாகா சார்பிலும்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் வாசன்
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]