டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை
சென்னை:
டான்சி வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவுக்கு ஆதரவாக இன்று(செவ்வாய்க்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுமீதான விசாரணை கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கியது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டியால் நியமிக்கப்பட்ட நீதிபதி என். தினகர் இந்தமனுவை விசாரித்தார்.
இரு தரப்பு வாதங்களும் கடந்த நவம்பர் 1ம் தேதி முடிவடைந்த நிலையில், மறு தேதி குறிப்பிடாமல் டான்சிவழக்கின் தீர்ப்பை நீதிபதி தினகர் தள்ளி வைத்தார்.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு டான்சி வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை நீதிபதி தினகர் வழங்கினார்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, முகமது ஆசிப், முன்னாள் டான்சி நிர்வாக இயக்குநர்டி.ஆர். சீனிவாசன், பத்திரப் பதிவு சிறப்பு அதிகாரி நாகராஜன், முதல்வரின் இணை செயலாளராக இருந்த எம்.கற்பூரப் பாண்டியன் ஆகிய ஆறு பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தினகர் தன்னுடைய தீர்ப்பில்கூறியுள்ளார்.
இவர்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் எதுவுமே அரசு தரப்பு வழக்கறிஞர்களால் சரிவர நீருபிக்கப்படாததால்இவர்கள் அனைவருமே விடுதலை செய்யப்படுகிறார்கள் என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.