For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுறா மீன்களுக்கான தடை நீக்கம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

சிலவகை சுறா மீன்களைப் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர்டி.ஆர். பாலு கூறினார்.

சுறா மீன்கள் உள்பட 52 வகையான கடல் வாழ் உயிரினங்களைப் பிடிப்பதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.

இத்தடையை நீக்க வேண்டும் என்று தமிழக மீனவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இதையடுத்து, சுற்றுச் சூழல் வல்லுனர்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பி ஆய்வு நடத்தினார் பாலு. பின்னர்அவர் மீன்வளத் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இதன் அடிப்படையில் 10 சுறா வகை மீன்கள் மற்றும் 24 சங்கு வகை உள்ளிட்ட மற்ற மீன்கள் ஆகியவற்றைப்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீடிப்பது என்றும் மற்ற 18 வகை மீன்களைப் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டதடையை நீக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இதற்கான அறிவிப்பை அமைச்சர் பாலு வெளியிட்டார்.விரைவில் இதற்கான அரசு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X