For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் பெரியார் மையம் இடிப்பு: வாஜ்பாய்க்கு வீரமணி கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டெல்லியில் பெரியார் மையக் கட்டடம் அந்த மாநகராட்சி நிர்வாகத்தால் இடிக்கப்பட்டதைக் கண்டித்து திராவிடர்கழகத் தலைவர் கி. வீரமணி பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த இல்லம் சட்ட விரோதமாகக் கட்டப் பட்டுள்ளது என்று கூறி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிபுகார் கொடுத்திருந்தார்.

இதையடுத்து டெல்லி மாநகராட்சி அக்கட்டடத்தை இடிக்கச் சொல்லி உத்தரவிட்டது. இதைத் தடுப்பதற்குஎவ்வளவோ முயற்சி செய்தும் உடனடியாக அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டு விட்டது.

ஆனால் இந்தக் கட்டடம் உள்ள இடம் டெல்லி மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்று கூறும் வீரமணி,இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையே அந்தக் கட்டடத்தை மீண்டும் எழுப்பும் பணியும் தொடர்ந்து நடைபெறும் என்றும் வீரமணிகூறியுள்ளார்.

மேலும் இந்தக் கட்டடத்தை இடிக்கும்போது, அதைத் தடுக்க முயற்சி செய்த அரசியல்வாதிகளுக்கும் நன்றிதெரிவித்துள்ளார் வீரமணி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X