சென்னை விமான நிலையத்திலிருந்து திரிசூலம் ரயில் நிலையத்திற்கு சுரங்கப் பாதை
சென்னை:
சென்னை விமான நிலையத்திலிருந்து திரிசூலம் ரயில்நிலையத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைவாகதொடங்கப்படும் என்று மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறினார்.
சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்திலிருந்து, திரிசூலம் ரயில்நிலையத்திற்கு சுரங்கப்பாதை அமைப்பதுகுறித்து, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகு நிருபர்களிடம் அமைச்சர் பாலு கூறியதாவது:
ஐந்து மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ள இந்த சுரங்கப்பாதையை அமைக்கும் பணி குறித்த முழுவடிவமைப்புத் திட்டங்களும் இன்னும் 10 நாட்களுக்குள் தீட்டி முடிக்கப்பட்டு விடும். பிறகு சுரங்கப்பாதைஅமைக்கக் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்படும்.
திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையத்திற்குச் செல்வதற்குள் பொதுமக்கள் போக்குவரத்துநெருக்கடியைச் சந்திக்க நேரிடுகிறது. இதைத் தவிர்ப்பதற்காகவே இந்த சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது.