For Daily Alerts
Just In
பண்ருட்டி சாராய சம்பவம்: கைதான 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு
பண்ருட்டி:
பண்ருட்டி விஷச் சாராய சம்பவத்தில் கைதான 7 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில்அடைக்கப்பட்டனர்.
பண்ருட்டியருகே விஷச்சாராயம் அருந்தி 53 பேர் இறந்தனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சாவுகளுக்கு காரணமான சாராய வியாபாரிகள் 7 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து கடலூர் எஸ்.பி. டேவிட்சன் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள இந்த 7 பேரும் குண்டர் தடுப்புசட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் கள்ளச் சாராயத்தை ஒழிக்க இம்மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் முன் வந்து உதவி செய்யவேண்டும் என்றும் அவர் கோரினார்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]