காஞ்சியில் அல்-உம்மா பெண் மனித வெடிகுண்டுகள்
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழம் பரும் கோவில்களை குண்டு வைத்துத் தகர்ப்போம் என அல்-உம்மாதீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து காஞ்சிபுரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள முக்கியகோவில்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டருக்கு சில நாட்களுக்கு முன் ஒரு கடிதம் வந்தது. அல்-உம்மாஅமைப்பின் சார்பில் எழுதப்பட்டுள்ளதாக கருதப்படும் அந்தக் கடிதத்தில்,
கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பாஷா, அப்துல் மதானி உள்ளிட்டோரைஉடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
பொடோ சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. இதை செய்யாவிட்டால் காஞ்சிபுரத்திற்குள் ஊடுருவியுள்ள ண்ெ மனிதவெடிகுண்டுகள் மூலம் முக்கிய கோவில்கள், பஸ் நிலையம் உள்பட பல இடங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்படும்என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்த போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி சாந்தகுமார் உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள புகழ் பெற்ற வரதராஜர் பெருமாள் கோவில், பஸ் நிலையம், காஞ்சி சங்கர மடம்உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.