For Daily Alerts
Just In
இன்ப அதிர்ச்சியில் மரணமடைந்த அதிமுக தொண்டர்
ஆண்டிப்பட்டி:
டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதைக் கேள்விப்பட்ட அதிமுக தொண்டரர் ஒருவர் இன்ப அதிர்ச்சியில்மரணம் அடைந்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியம் ஒக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 52). இவர்இப்பகுதியில் அதிமுக அவைத்தலைவராக உள்ளார்.
இவர் ஜெயலலிதாவின் மீது மிகுந்த அபிமானம் உடையவர். ஜெயலலிதா விடுதலையானதை டி.வியில்பார்த்துவிட்டு அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தார். அங்கும், இங்கும் ஓடினார். நண்பர்களுக்கு லட்டு வாங்கித் தந்துதானும் தின்றார்.
ஓவர் மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டிருந்தவருக்கு வீட்டிற்கு திரும்பியவுடன் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.உடனடியாக மரணமடைந்தார். அவரது உடலுக்கு அப்பகுதி அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]