For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுவையில் "குடிமகன்கள்" சங்கம்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி "குடிமகன்கள்" அனைவரும் இணைந்து தங்களது "நல்வாழ்வு"க்கென ஒரு சங்கத்தைஏற்படுத்தியுள்ளனர்.

"பாண்டிச்சேரி மது அருந்துவோர் சங்கம்" என இதற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் தலைவராகதுரை என்ற ஜெயக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மது அருந்துவோர் நலனைப் பாதுகாக்கவே இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பார்களில் சுகாதாரமானசூழ்நிலை இருக்க வேண்டும். அசுத்தமான சுற்றுச் சூழ்நிலையில் மது அருந்தினால் அது அருந்துவோரின் உடலுக்குகேடு விளைவிக்கும்.

எனவே கள்ளுக்கடை, மதுக்கடை மற்றும் சாராயக் கடைகளில் உள்ள பார்களில் சுற்றுச் சூழலை பேண வேண்டும்என்று துரை கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X