For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறப்பு பூஜை செய்ய சமயபுரம் செல்கிறார் ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

மீண்டும் முதல்வராகப் பதவியேற்பதற்கு முன் திருச்சி-சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைசெய்யவுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

கடந்த வாரம் ஜெயலலிதா டான்சி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது தோழிசசிகலா குருவாயூருக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார்.

இதனை தொடர்ந்து ஜெயலலிதாவும் ஐதராபாத் சென்று, அங்கிருந்து திருப்பதி, குருவாயூருக்கு சிறப்புதரிசனத்திற்காக செல்கிறார்.

சென்னை திரும்பியதும் சில வாரங்களில் திருச்சி சமயபுரம் கோயிலுக்கு சிறப்பு தரிசனத்திற்காக செல்லவிருக்கிறார்.அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சமயபுரம் கோயில் அறங்காவலர்களுக்கு வாய்மொழி உத்தரவுவழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிற்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பை அளிக்க வேண்டும் என்பதற்காக, கோயில் நிர்வாகத்தின்சார்பில் நீண்ட பச்சை கம்பளம் ஒன்றை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

காரில் வந்து இறங்கியவுடன், அவரது பாதங்கள் அந்த கம்பளத்தில் பட்டு தான் சன்னதிக்குள் நுழையும்படியானவசதிகள் செய்ய தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X