For Daily Alerts
Just In
காஷ்மீர் எல்லையில் காத்திருக்கும் ஆபத்து
சென்னை:
ஆப்கானிஸ்தானில் போர் முடிந்த பின் காஷ்மீர் எல்லையில் பெரும் சண்டை காத்திருக்கிறது என்று இந்திய ராணுவஅதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சாந்தனு செளத்ரி எச்சரித்துள்ளார்.
கடந்த ஆண்டு நான் சென்னையில் நடந்த இதே நிகழ்ச்சியில் பேசுகையில், ஆப்கானிஸ்தானில் பதட்டம் ஏற்படும்வாய்ப்பு இருப்பதாக கூறினேன். அதுபோலவே இப்போது ஆப்கானிஸ்தானில் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் போர் முடிந்த பின் காஷ்மீர் எல்லையில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே பெரும் சண்டைகாத்திருக்கிறது. ஆனால் இது பெரும் போராக மாறும் வாய்ப்பில்லை. ஆனால் சண்டை கடுமையானதாக இருக்கும்.
இதேபோல, நேபாளத்தில் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் மாவோயிச தீவிரவாதம் இந்தியாவுக்குள் பரவும்ஆபத்தும் இருக்கிறது என்றார் செளத்ரி.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]