For Daily Alerts
Just In
இலங்கை: அமைச்சரவைக்கு வர எதிர்க் கட்சி மறுப்பு
கொழும்பு:
ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான இலங்கை அமைச்சரவையில் இடம் பெற அவர் விடுத்திருந்த அழைப்பைஏற்க மக்கள் கூட்டணி கட்சி மறுத்து விட்டது.
இதை தொடர்ந்து அவரது தலைமையிலான அமைச்சரவையில் சந்திரிகாவின் மக்கள் கூட்டணிக் கட்சிக்கும் இடம்கொடுக்க ரணில் தயாராக இருப்பதாக கூறியிருந்தார். இதன் மூலம் அவர் ஒரு தேசிய அரசு அமைக்கப்படும்என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் மக்கள் கூட்டணிக் கட்சி இந்த அழைப்பை மறுத்து விட்டது. இதுகுறித்து, அக்கட்சியை சேர்ந்த மங்களசமரவீர் கூறியதாவது:
இலங்கையில் அமைதியை ஏற்படுத்த ரணிலுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
மேலும் இலங்கை அமைதிக்காக அவர் மேற்கொள்ளவிருக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள்எங்களுடைய ஆதரவை அளிப்போம்.
ஆனால் அமைச்சரவையில் இடம்பெற நாங்கள் தயாராக இல்லை என்று கூறினார் சமரவீர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]