For Quick Alerts
For Daily Alerts
Just In
சு. சுவாமிக்கு கொலை மிரட்டல் கடிதம்
மதுரை:
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமியை கொலை செய்யப் போவதாக மிரட்டி எழுதிய கடிதம் ஒன்று,மதுரையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளது.
டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகசுப்பிரமணிசுவாமி அறிக்கையளித்துள்ள நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இதப்பற்றி அவரது கட்சியின் மாநிலதலைவர் சந்திரலேகா கூறுகையில்,
மதுரையில் உள்ள ஜனதா கட்சி அலுவலகத்திற்கு, டிசம்பர் 4 ம் தேதி தபாலில் ஒரு கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில் சுப்பிரமணியசுவாமியை கொலை செய்து விடுவதாகவும், மதுரை ஜனதா கட்சி அலுவலகத்தைவெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
அந்த கடிதம் மதுரை மாநகர போலீஸ் துறைக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]