For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்டிப்பட்டிக்கு ரூ. 95 கோடியில் குடிநீர்த் திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜெயலலிதா போட்டியிடவுள்ள ஆண்டிப்பட்டி உள்ளிட்ட மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் வறட்சியால்பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 95 கோடி செலவில் புதிய குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றவுள்ளது.

மதுரை மாவட்டம் சேடப்பட்டி, உசிலம்பட்டி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில்குடிநீருக்குப் பெரும் பிரச்சினை உள்ளது. இதைத் தீர்க்கும் வகையில் வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துகுடிநீரை வினியோகிக்கும் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வாயம் அரசுக்கு பரிந்துரைத்தது.

இத் திட்டத்தைப் பரிசீலித்த அரசு தற்போது இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. திட்ட மதிப்பீடு ரூ. 95கோடி ஆகும். இதற்காக உலக வங்கியிடம் நிதி உதவி கோர உள்ளது மாநில அரசு.

இந்த புதிய குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டால் மதுரை மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள மேற்கண்ட பகுதிகளில்குடிநீர்ப் பிரச்சினை தீரும். மொத்தம் 4 லட்சம் பேர் பயனடைவார்கள்.

ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட உள்ளார் என்பதுநினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X