For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரமேஷ் குடும்பம் தற்கொலை: கொலை வழக்காக மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ரமேஷ் குடும்பம் தற்கொலை வழக்கை விசாரித்த போலீசார், காண்ட்ராக்டர் தெய்வசிகாமணியின் ஒப்புதல்வாக்குமூலத்தையடுத்து அதை கொலை வழக்காக மாற்ற முடிவு செய்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ரமேஷ் தன்குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.

அவர்கள் அனைவரும் பூச்சி மருந்து சாப்பிட்டுத்தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால்பிரேத பரிசோதனையின்போது அவர்கள் உடம்பில் சயனைடு கலந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மாநகராட்சி காண்ட்ராக்டர்தெய்வசிகாமணியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தார்சாலை அமைக்கும் பணியில் கமிஷன் பணம் கொடுக்காததால்தெய்வசிகாமணியை ரமேஷ் கடத்தி சென்றதாக கூறப்பட்டு வந்தது.

இதன் அடிப்படையில் போலீசார் கான்டிராக்டர் தெய்வசிகாமணியை கைது செய்து விசாரித்து வந்தனர். இன்று(செவ்வாய்க்கிழமை) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி ரவீந்திரன் முன்னிலையில் அவர்ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது தெய்வசிகாமணி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாகவும், பல திடுக்கிடும் தகவல்கள்வெளியானதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இந்த வாக்குமூலத்தையடுத்து ரமேஷ் தற்கொலை வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாகப் போலீசார்தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக மேலும் சில பேர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும்போலீசார் கூறினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X