For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரீட்டா கற்பழிப்பு சம்பவம்: முன் ஜாமீன் கோருகிறார் அரசு டாக்டர்

By Super
Google Oneindia Tamil News

சென்னை:

ரீட்டா கற்பழிப்பு வழக்கு தொடர்பாக, செஞ்சி அரசு மருத்துவமனை டாக்டர் இளங்கோவன் உயர் நீதி மன்றத்தில்முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

ரீட்டா கற்பழிப்பு சம்பவத்தை விசாரித்த ஐ.ஜி. திலகவதி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த அறிக்கையில், ரீட்டாவை மருத்துவ சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது,அங்கு பணியில் இருந்த டாக்டர் இளங்கோவன் ரீட்டாவுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று திலகவதிகுறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து டாக்டர் இளங்கோவன் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரீட்டாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது, நான்பணியில் இல்லை.

என்னை போலீசார் கைது செய்யக்கூடும். எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று டாக்டர்இளங்கோவன் அந்த மனுவில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X