For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சரணடையத் தவறிய அல்-கொய்தா படையினர்

By Staff
Google Oneindia Tamil News

தோரா போரா:

சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா படையினர் தங்களுக்கு விதிக்கப்பட்டகாலக்கெடுவுக்குள் சரணடையத் தவறி விட்டனர் என்று ஆப்கானிய கமாண்டர் ஹஜ்ரத் அலி கூறினார்.

கிழக்கு ஆப்கானிஸ்தானின் தோரா போரா மலைப் பகுதிகளில் பதுங்கியிருந்த அல்-கொய்தா படையினர் இன்று(புதன்கிழமை) காலைக்குள் சரணடையப் போவதாகக் கூறியிருந்தனர்.

ஆனால் இன்று காலை 9 மணி வரை அதற்கான அறிகுறியே தென்படவில்லை என்றார் அலி.

அநேகமாக இன்னும் சில மணி நேரங்களில் அவர்கள் சரணடைந்து விடுவதாக நம்பும் அலி, அப்படிசரணடையவில்லை என்றால் நாங்கள் அவர்களைக் கொன்று விடுவோம் என்று எச்சரித்துள்ளார்.

தலிபான்களின் ஆயுதங்கள் கைப்பற்றல்:

இதற்கிடையே தலிபான்கள் விட்டுச் சென்ற ஆயுதங்களைக் கைப்பற்றி அழிக்கும் பணியில் அமெரிக்க மெரைன்வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை வரிசையாக வைத்து, புகைப்படம் எடுத்த பிறகு அவற்றை மெரைன் வீரர்கள்அழித்து விடுகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X