கிரிக்கெட்: இந்தியா திணறல்
அகமதாபாத்:
இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது ஆட்டத்தின் முடிவில் இந்தியா 36 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்தநிலையிலேயே 2 விக்கெட்டுகளை எடுத்து திணற ஆரம்பித்துள்ளது.
இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 407 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இங்கிலாந்துஅணியின் ஒயிட் அபாரமாக விளையாடி சதமடித்து (121 ரன்கள்) ஹர்பஜன் பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் கும்பிளே 7 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
பின்னர் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான தாஸ்குப்தாவும், தாசும் களம் இறங்கினர்.
ஆரம்பத்திலிருந்தே அவர்கள் நிதானமாக விளையாடினர். இருந்தாலும் 23.2 வது ஓவரில் பிளின்ட்டாப்பின் பந்துவீச்சில் புட்சரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் தாஸ் (41 ரன்கள்). அப்போது அணியின் ஸ்கோர் 54 ஆகஇருந்தது.
இந்திய அணியின் ஸ்கோர் மேலும் 10 ரன்களே உயர்ந்த நிலையில், கடந்த டெஸ்டில் சதம் அடித்த தாஸ்குப்தா,வெறும் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் இன்றைய ஆட்டநேர இறுதியில், இந்தியா 36 ஓவருக்கு இரண்டு விக்கெட்டை இழந்து 71 ரன்களைஎடுத்து திணறிக் கொண்டிருக்கிறது.
துவக்க ஆட்டக்காரர்களை இழந்த சோகத்துடன் சச்சின் டெண்டுல்கர் 2 ரன்களுடனும், ராகுல் டிராவிட் 5ரன்களுடன் களத்தில் உள்ளனர். இவர்களுடைய நாளைய ஆட்டத்தை நம்பித்தான் இந்திய அணி உள்ளதுஎன்றுகூட கூறலாம்.
ஸ்கோர் விவரம்:
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து - 407/10 (144.3 ஓவர்கள்)
இந்தியா - 71/2 (36 ஓவர்கள்)