டெல்லி பனிமூட்டத்தால் சென்னை விமானங்கள் தாமதம்
டெல்லி:
டெல்லியில் இன்று (புதன்கிழமை) காலை கடுமையான பனிமூட்டம் நிலவியதால், சென்னைக்கு வர வேண்டியவிமானங்கள் 4 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்தன.
டெல்லியில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.எதிரே யார் வருகிறார்கள் என்று கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் மிகக் கடுமையாக இருந்தது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் முழுமையாக பனி மூடி இருந்ததால், விமானப் போக்குவரத்துஇன்று காலையில் முழுமையாகப் பாதிக்கப்பட்டது.
இன்று காலையில் சென்னையிலிருந்து டெல்லி செல்ல வேண்டிய விமானம், இந்தப் பனிமூட்டம் காரணமாகஜெய்ப்பூரில் இறங்கியது. இவ்விமானத்தில்தான் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணம் செய்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை டெல்லியிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமும்,ஜெட் ஏர்வேஸ் விமானமும் நான்கு மணி நேரத்திற்கும் மேலான தாமதத்துடன் கிளம்பின.
இந்த வாரம் முழுவதும் டெல்லியில் இந்தப் பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.