For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க நிறுவனம் ரூ.1 கோடி திருப்பித் தரும்: பெர்னாண்டஸ்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

அலுமினிய சவப்பெட்டி சப்ளை செய்த அமெரிக்க நிறுவனத்திடம் ரூ.1 கோடி திருப்பி கேட்டுள்ளோம் என்றுராணுவ மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை வைப்பதற்கு அலுமினிய சவப்பெட்டிகள் வாங்கியதில் ரூ.1கோடி ஊழல் நடந்துள்ளதாக நேற்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் புகார் எழுப்பின.

இது தொடர்பாக மத்திய ராணுவ மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் நிருபர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர்நிருபர்களிடம் கூறியதாவது,

கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களின் உடல்களை எடுத்து செல்வதற்காக அமெரிக்காவில் உள்ள பிட்ரன்அண்டு பைஸ் நிறுவனத்திடம் இருந்து சவப்பெட்டிகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஒரு சவப்பெட்டிக்கு 2,665 டாலர் கேட்டதற்கு, 2,500 டாலர் என்று அதன் விலையை அதற்கான குழு நியமித்து,ஒப்பந்தம் போடப்பட்டது. 18 கிலோ எடை கொண்ட 150 அலுமினிய சவப்பெட்டிகளுக்கு ரூ.1 கோடியே 80லட்சம் என்ற விலையில் ஆர்டர் கொடுத்து இருந்தோம்.

ஆனால் அந்த நிறுவனமோ ஒவ்வொன்றும் 54 கிலோ எடையுள்ள எடையுள்ள பெட்டிகளாக அனுப்பி வைத்துவிட்டது. 6 கோடி ரூபாய்க்கு 150 பெட்டிகள் வந்து இருந்தன. அந்த பெட்டிகள் வந்த பிறகே அவை 54 கிலோஎடையுள்ள பெட்டிகள் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

எனவே அந்த காண்டிராக்டை ரத்து செய்து பணத்தை திருப்பி கேட்டோம். ரூ.78 லட்சம் ஏற்கனவே திரும்பப்பெறப்பட்டது. மீதியுள்ள 1 கோடியே 2 லட்சத்தை கேட்டு கடிதம் எழுதி இருக்கிறோம். தராவிட்டால் கோர்ட்டில்வழக்கு தொடர்வோம்.

மத்திய கணக்கு தணிக்கை அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டபோது நான் மந்திரி பதவியில் இல்லை. மத்தியகணக்கு தணிக்கை அதிகாரி கொடுத்துள்ள தகவல் பற்றி பொதுக்கணக்கு குழு முடிவு செய்து அறிவிக்கும் என்றுஅவர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X