சென்னையில் காண்ட்ராக்டர் குடும்பமே தற்கொலை
சென்னை:
சென்னையைச் சேர்ந்த காண்ட்ராக்டர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜகிரி. காண்ட்ராக்டராக இருந்து வந்தார். இவருக்கும், மாமியார்பத்மாவதிக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக ராஜகிரி மீது பத்மாவதிபோலீசில் புகார் கொடுத்தார்.
போலீசில் பத்மாவதி புகார் கொடுத்ததால், பயந்து போன ராஜகிரி, போலீசார் தன்னை சித்திரவதை செய்வார்களோஎன்று பயத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவரது மனைவியும் அதற்குஉடன்பட்டார் என்று தெரிகிறது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு ராஜகிரி, மனைவி சுஹாசினி, மகன் ஜெகன் ஆகியோர் தூக்கில் தொங்கிதற்கொலை செய்து கொண்டனர்.
இதே அண்ணாநகரில் தான் சில மாதங்களுக்கு முன்பு ரமேஷ் என்ற தொழிலதிபர் குடும்பத்தோடுதற்கொலைசெய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.