For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அல்-கொய்தா படையினர் சரணடைய மேலும் ஒரு வாய்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

தோரா போரா:

சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா படையினர் சரணடைய ஆப்கானிஸ்தான பழங்குடிப்படையினர் மேலும் வாய்ப்பளித்துள்ளனர்.

இன்றைக்குள்ளாக அல்-கொய்தாவினர் சரணடையாவிட்டால், அவர்களைக் கொன்று விடப் போவதாகவும்பழங்குடிப் படையினர் எச்சரித்துள்ளனர்.

நேற்று காலை 9 மணியுடன் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்தும் தோரா போரா மலைப்பகுதிகளில் உள்ள அல்-கொய்தா படையினர் சரணடையவில்லை.

இதையடுத்து, அமெரிக்க விமானங்கள் அந்த மலைப் பகுதிகளில் தொடர்ந்து கடுமையான குண்டு வீச்சுத்தாக்குதலில் ஈடுபட்டன.

இன்றும் அமெரிக்காவின் ஏசி-130 ரக விமானங்கள் தோரா போரா மலைப் பகுதிகளில் குண்டு மழை பொழிந்துவருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X