இந்தியா 291க்கு ஆல் அவுட்: டெண்டுல்கர் சதம்
அகமதாபாத்:
இந்தியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் தட்டுத் தடுமாறி சதமடித்த போதிலும்,291 ரன்களுக்கு இந்தியா முதல் இன்னிங்சை இழந்தது.
இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடந்து வரும் இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாளான இன்று(வியாழக்கிழமை) இந்திய அணியினர் மிகவும் திணறினர்.
இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 71 ரன்கள் என்ற இரண்டாவது நாள் ஸ்கோருடன் இன்று ஆடத் தொடங்கியஇந்திய அணி வந்த வேகத்திலேயே ராகுல் டிராவிட்டின் (7 ரன்கள்) விக்கெட்டையும் கேப்டன் சவுரவ் கங்குலியின்(5 ரன்கள்) விக்கெட்டையும் இழந்தது.
ஆனால் டெண்டுல்கரும், வி.வி.எஸ். லக்ஷ்மணும் நின்று நிதானமாக ஆடி, இந்திய அணியின் ஸ்கோரைக்கணிசமாக உயர்த்தினர்.
டெண்டுல்கர் வெகு சிறப்பாக ஆடி 197 பந்துகளைச் சந்தித்து 103 ரன்களைக் (15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்)குவித்தார். லக்ஷ்மணும் தன் பங்குக்கு 75 ரன்களைச் (192 பந்துகள், 9 பவுண்டரிகள்) சேர்த்தார்.
ஆனால் இந்திய அணியில் அடுத்து விளையாடிய யாருமே சோபிக்காத காரணத்தால், 291 ரன்களுக்கு இந்தியாஅனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது விட்டது.
இதையடுத்து இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட இந்தியா 116 ரன்களைக் குறைவாகஎடுத்துள்ளது.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆட ஆரம்பித்த இங்கிலாந்து அணியினர், ஆரம்பத்திலேயே அதிரடிஆட்டத்தை ஆட ஆரம்பித்தது.
இன்றைய ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி, மூன்றே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்களைஎடுத்துள்ளது.
ஸ்கோர் விவரம்:
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து - 407/10 (144.3 ஓவர்கள்)
இந்தியா - 291/10 (120.3 ஓவர்கள்)
2வது இன்னிங்ஸ்
இங்கிலாந்து - 15/0 (3 ஓவர்கள்)