அமைச்சர்கள், முப்படைத் தலைவர்களுடன் வாஜ்பாய் ஆலோசனை
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று அவசரமாய் கூடி நாடாளுமன்றத்தின் மீதுநடந்த தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து விவாதித்து வருகிறது.
வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்:
நாடாளுமன்ற வளாகத்துக்குள் தீவிரவாதிகள் கொண்டு வந்து வைத்த வெடிகுண்டை ராணுவம் வெடிக்கச்செய்தனர். 4 மணிக்கு இந்த குண்டை ராணுவம் வெடிக்கச் செய்தது.
கார் நிறைய குண்டுகள்:
தீவிரவாதிகள் வந்த காரை சோதனையிட்டபோது அதில் கிலோ கணக்கில் வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து அந்த காரைத் தனியான இடத்துக்கு கொண்டு சென்ற ராணுவம் இந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச்செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்கா கண்டனம்:
இந்தியா மீது நடந்த தாக்குதலுக்கு அமெரிக்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளின் இந்தச் செயலைவன்மையாகக் கண்டிக்கிறோம் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.