For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

படு வேகத்தில் பதிலடித் தாக்குதல் நடத்திய பாதுகாப்புப் படையினர்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நாடாளுமன்றத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் ஈடுபட்டிருந்த டெல்லி போலீஸ், மத்திய ரிசர்வ் போலீஸ்,இந்தோ-திபெத் எல்லை போலீஸ், இன்டலிஜென்ஸ் பீரோ உளவுப் பிரிவினர், கறுப்புப் பூனைப் படையினர்ஆகியோர் மிக விரைவாக பதிலடித் தாக்குதல் நடத்தியதால் தான் பெரும் அளவிலான உயிர்ச் சேதம்தவிர்க்கப்பட்டுள்ளது.

கருப்புப் பூனைப் படையினரைப் போல வேடமிட்டுக் கொண்டு மத்திய அரசின் சிவப்பு விளக்கு சைரன்பொறுத்தப்பட்ட காரில் வந்த தீவிரவாதிகளை இந்தப் படையினர் உடனடியாக அடையாளம் தெரிந்துகொண்டுவிட்டனர்.

அவர்கள் சுடத் தொடங்கிய சில வினாடிகளிலேயே சுதாரித்துக் கொண்டு பதிலடித் தாக்குதலைத்தொடங்கிவிட்டனர் இந்தியப் படையினர்.

டெல்லி போலீசைச் சேர்ந்த சுரேஷ் குமார் உடனடியாக ஓடிச் சென்று அபாய எச்சரிக்கை மணியை அழுத்தினார்.இதையடுத்து நாடாளுமன்றத்தின் பல பகுதிகளில் பரவி நின்றிருந்த படையினர் உடனடியாக ஓடி வந்துதீவிரவாதிகளை சுற்றி வளைத்துச் சுட்டனர்.

அவர்கள் நாடாளுமன்ற மத்திய அவைக்குள் நுழைந்துவிடாமல் தடுத்தனர். மேலும் துணை ஜனாதிபதி இருந்தபகுதிக்கு உடனடியாக கூடுதல் படைகள் விரைந்து அவரைப் பாதுகாத்தனர்.

சில நிமிடங்களிலேயே அமைச்சர்களின் அறைகளை பூட்டிக் கொண்டு வெளியில் காவலுக்கு நின்றனர். அதேபோல வளாகத்தில் இருந்த எம்.பிக்களையும் அருகில் இருந்த பாதுகாப்பான பகுதிகளுக்கும் இழுத்துச் சென்றனர்.

இதனால் சுமார் 400 எம்.பிக்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் இருந்தும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

துப்பாகிக்கிக் குண்டுகள் சீறிப் பாயந்தபோது கார் பார்க்கிங் அருகே தோட்டத்தில் நின்றிருந்த காவலாளி தான்முதுகில் குண்டு பாய்ந்து இறந்துள்ளார்.

துப்பாக்குகிச் சூடு நடந்து கொண்டிருந்தபோதே ராணுவம் வந்திறங்கிவிட்டது. அதே போல உயர் அதிகாரிகளும்உடனடியாக அந்த இடத்தில் இருந்தனர். ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்தன.

அரை மணி நேரத்தில் 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு அவர்கள் கொண்டு வந்த குண்டுகளையும்அப்புறப்படுத்தி காயமடைந்த 26 பேரை மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்தனர் இந்திய பாதுகாப்புப்படையினர்.

அதே போல பெல்டில் பாம் அணிந்திருந்த ஒரு தீவிரவாதி நாடாளுமன்றத்தின் முக்கிய வாயில் வழியாக மறைந்துமறைந்து ஊடுருவி போது, அவன் கண்ணில் படாமல் மறைந்து நின்றிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்காவலர் அந்த பெல்டில் இருந்த வெடிகுண்டை நோக்கி சுட்டார். இதில் அந்த குண்டு வெடித்து தீவிரவாதிஇறந்தான்.

தாக்குதலில் மொத்தம் 6 போலீசார் கொல்லப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X