For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை: 6 போலீசார் பலி, ஒருவன் தப்பினான்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நாடாளுமன்றத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுவிட்டனர். இவர்கள் நடத்தியதாக்குதலில் 6 டெல்லி போலீசாரும் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடன் டிரைவராக வந்தவன் தப்பிவிட்டதாகக்கூறப்படுகிறது.

கையெறிகுண்டுகள், ஏ.கே.-47 துப்பாக்கிகளுடன் நுழைந்த தீவிரவாதிகள் காவலில் இருந்த போலீசாரை சுட்டுக்கொன்றுவிட்டு உள்ளே நுழைந்தனர்.

இதையடுத்து போலீசார் திருப்பி நடத்தியத் தாக்குதலில் முதலில் 4 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு தீவிரவாதி மறைந்துவிட்டான். அவனையும் பாதுகாப்புப் படையினர் தேடிப் பிடித்து சுட்டுக்கொன்றனர். முன்னதாக இந்தத் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதில் பெரும் வெடிச் சத்தமும் எழுந்தது.

இத் தாக்குதலையடுத்து நாடாளுமன்றத்தை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. வெடிகுண்டு நிபுணர்களும்வந்திறங்கியுள்ளனர்.

தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஏ.என்.ஐ. கேமராமேன் மீதும்குண்டுகள் பாய்ந்தன. அவர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இத் தாக்குதலில் மொத்தம் 11 பேர் வரை இறந்துவிட்டதாகத் தெரிகிறது.

ஒரு தீவிரவாதி தப்பிவிட்டான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X