For Quick Alerts
For Daily Alerts
Just In
நாடாளுமன்றத்துக்குள் வெடிகுண்டு: செயலிழக்கச் செய்ய முயற்சி
டெல்லி:
நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறித்து ஜனாதிபதி கே.ஆர். நாராயணனுடன் பிரதமர்வாஜ்பாய் தொலைபேசியில் விளக்கினார்.
இவர்கள் போலியான பார்லிமென்ட் பாஸ் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு காரில் நாடாளுமன்றத்துக்குள்நுழைந்துள்ளனர்.
இத் தாக்குதல் நடந்தபோது 200 எம்.பிக்கள் அங்கிருந்தனர். தாக்குதல் தொடங்கியவுடன் பிரதமரையும் சோனியாகாந்தியையும் கருப்புப் பூனைப் படையினர் பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டதாகத் தெரிகிறது.
இத் தாக்குதல் குறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார். இன்று பிற்பகலில்பிரதமரின் இல்லத்தில் இக் கூட்டம் நடக்கிறது.
இதற்கிடையே நாடாளுமன்றத்துக்குள் ஒரு வெடிகுண்டு கிடக்கிறது. இந்த குண்டை செயலிழக்கச் செய்யும்முயற்சிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Comments
government terrorism commando meeting car parliament cabinet bin laden ambulance jaswant singh fernandes
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]