அதிரடிப்படை ஐ.ஜி. மாற்றத்தால் வீரப்பன் வேட்டையில் பாதிப்பில்லை
சென்னை:
வீரப்பனை தேடும் அதிரடிப்படையில் இருந்து தான் மாற்றப்பட்டதால் வீரப்பனைத் தேடும் அதிரடிப்படையினரின்பணியில் பாதிப்பிருக்காது என்று சென்னை போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கூறியுள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) விஜயகுமார் நிருபர்களிடம் பேட்டியளிக்கையில் கூறியதாவது:
அதிரடிப்படையில் இருக்கும் அனைத்து வீரர்களும் நல்ல திறமை வாய்ந்தவர்கள். அவர்கள் மிகத் திறமையாகவீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
நான் அதிரடிப்படையின் பொறுப்பிலிருந்து வந்து விட்டதால் வீரப்பனைத் தேடும் பணியில் பாதிப்பிருக்காது என்றுவிஜயகுமார் கூறினார்.
நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்திடம் கோபாலுக்கு எதிராக சாட்சியளிக்கக்கூறி கர்நாடகப் போலீசார்மிரட்டியதாக சிவசுப்பிரமணியத்தின் வக்கீல் கூறியதைப்பற்றி கேட்டபோது, "அவர் தன்னுடைய கருத்தைக்கூறுவதற்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் இதைப்பற்றி நான் எந்த கருத்தும் கூறமுடியாது" என்றார் விஜயகுமார்.