For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆப்கன் அமைச்சர் கடும் கண்டனம்
டெல்லி:
டெல்லியில் நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்கு ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லாஅப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது இந்தியக் குடியரசுக்கு மட்டுமல்லாமல் மனித இனத்திற்கே எதிரான தாக்குதல் என்று அப்துல்லா கூறியுள்ளார்.
இத்தாக்குதலுக்கும் சர்வதேச தீவிரவாதத்துக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு என்று கூறும் அப்துல்லா, இச்சம்பவத்தில்உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களு"க்கு தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உள்துறை அமைச்சர் அத்வானியை டாகடர் அப்துல்லா அப்துல்லா சந்தித்து 20 நிமிடங்கள் வரைபேசினார்.
ஆப்கானில் இன்னும் சில நாட்களில் அமையவிருக்கும் அரசு பற்றியும், இரு நாடுகளுக்கும் இடையே உறவுபற்றியும் அவர்கள் பேசினர்.
Comments
Story first published: Sunday, September 1, 2002, 5:30 [IST]