For Daily Alerts
Just In
டான்சி வழக்கில் அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் டிஸ்மிஸ்
சென்னை:
ஜெயலலிதா மீதான டான்சி அப்பீல் வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடபதி அந்தப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
டான்சி அப்பீல் வழக்கில் அரசுத் தரப்பில் வெங்கடபதி ஆஜரானார். மேலும், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டேஹோட்டல் வழக்கிலும் அவர் அரசு சார்பாகவும் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் வாதாடினார்.
இரு வழக்குகளிலும் ஜெயலலிதா சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.
வழக்கின் தீர்ப்பு தற்போது வந்து விட்ட நிலையில், "உங்களது பணி முடிந்து விட்டது. இனிமேல் அரசுக்கு உங்களதுசேவை தேவைப்படாது" என்று கூறி அரசு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து வெங்கடபதியை தமிழக அரசுநீக்கியுள்ளது.
இதுதொடர்பாக மாநில பொதுத்துறை செயலாளர் பிச்சாண்டி, வெங்கடபதிக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.
வெங்கடபதியை சென்னை உயர்நீதிமன்றம்தான் அரசு வழக்கறிஞராக நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]