ராஜஸ்தானில் 2 ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகள் கைது
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகள் 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த இரண்டு பேரும் சிறந்த கம்ப்யூட்டர் நிபுணர்கள். இவர்கள் இங்கிருந்து பாகிஸ்தானில்உள்ள ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளுக்கு இன்டர்நெட் மூலம் ரகசியமாக பல ஈ-மெயில்களை அனுப்பியுள்ளனர்.
இதற்காக அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ. நிறைய பணம் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஒன்றரை வருடங்களாக அவர்கள் இங்குதான் வசித்து வந்தனர் என்றும் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ்உள்பட அவர்கள் இந்தியாவில் வசிப்பதற்கான பல ஆவணங்களும் அவர்களிடம் உள்ளன என்றும் ராஜஸ்தான்போலீசார் தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் போதைப் பொருட்களையும் போலீசார்கைப்பற்றியுள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) நடந்த இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் உள்ளதா என்றகோணத்திலும் போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.