For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர்களை பணயக் கைதிகளாகப் பிடிக்கத் திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நேற்று தாக்குதல் நடத்திய தீவரவாதிகள் நாடாளுமன்றத்தின் அவைகளுக்குள் நுழைந்து அமைச்சர்களையும்,எம்.பிக்களையும் பணயக் கைதிகளாகப் பிடிக்கத் திட்டமிட்டிருந்தனர் என உளவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

முதலில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரைக் கொண்டு மோதி நாடாளுமன்றத்தைத் தகர்க்க திட்டமிட்டிருந்ததீவிரவாதிகள், வேறு சில திட்டங்களையும் வைத்திருந்தனர்.

பிரதமர், துணை ஜனாதிபதியைக் கொல்லவும் அது முடியாவிட்டால், அவையில் இருக்கும் அமைச்சர்கள்,எம்.பிக்களை பணயக் கைதிகளாகப் பிடிக்கவும் திட்டமிட்டிருந்தனர்.

அதே போல இந்தத் தீவிரவாதிகள் பயன்படுத்திய கார் முன்னதாக திருடிக் கொண்டு வரப்பட்டது எனக்கூறப்பட்டது. ஆனால், அது திருடப்பட்ட கார் இல்லை என டெல்லி போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக் கழகம் என்ற நிறுவனம் இந்தக் காரை சில தினங்களுக்கு முன் வடக்கு டெல்லியில்உள்ள கார் டீலரிடம் விற்றுள்ளது. அவரிடம் 2 பேர் வந்து இந்தர்க் காரை வாங்கியுள்ளனர்.

காரை வாங்கிய அந்த 2 பேரும் தாங்கள் ஜம்மூ-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவைச் சேர்ந்தவர்கள் எனக்கூறியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X