For Daily Alerts
Just In
நாடாளுமன்றத்தில் இரவு முழுவதும் ராணுவம் சோதனை
டெல்லி:
நாடாளுமன்றத்தை இன்றே மீண்டும் கூட்ட அரசும் எதிர்க் கட்சிகளும் உறுதியாக இருந்ததால், நேற்றிரவுமுழுவதும் நாடாளுமன்றக் கட்டத்தில் ராணுவத்தினரும் போலீசாரும் முழுச் சோதனை நடத்தி வெடிகுண்டுகளைஅப்புறப்படுத்தினர்.
தீவிரவாதிகள் பயன்படுத்தி காரை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட தேசிய பாதுகாப்புப் படைகமாண்டோக்கள் நள்ளிரவில் அதில் இருந்த 30 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகளை தனியே பிரித்து வெடிக்கச்செய்தனர்.
இந்த கார் இப்போது டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதே போல தீவிரவாதிகளில் பைகளில் கொண்டு வந்த குண்டுகளும் தேடி எடுக்கப்பட்டு வெடிக்கப்பட்டன. இருகையெறி குண்டுகளும் செயலிழக்கச் செய்யப்பட்டன.
நாடாளுமன்றத்தின் எங்குமே குண்டுகளோ, துப்பாக்கிகளோ இல்லை என்பதை அதிகாலை 3 மணிக்கு ராணுவம்உறுதி செய்தது.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]