For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடாளுமன்றத்தில் இரவு முழுவதும் ராணுவம் சோதனை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நாடாளுமன்றத்தை இன்றே மீண்டும் கூட்ட அரசும் எதிர்க் கட்சிகளும் உறுதியாக இருந்ததால், நேற்றிரவுமுழுவதும் நாடாளுமன்றக் கட்டத்தில் ராணுவத்தினரும் போலீசாரும் முழுச் சோதனை நடத்தி வெடிகுண்டுகளைஅப்புறப்படுத்தினர்.

நேற்று தாக்குதல் நடத்தப்பட்ட நாடாளுமன்றக் கட்டடத்தை ராணுவம் தனது முழுக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது. நேற்றிரவு முழுவதும் நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் நாடாளுமன்றக் கட்டடம் முழுவதும்மோப்ப நாய்கள், அதி நவீனக் கருவிகளுடன் சோதனை நடத்தினர்.

தீவிரவாதிகள் பயன்படுத்தி காரை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட தேசிய பாதுகாப்புப் படைகமாண்டோக்கள் நள்ளிரவில் அதில் இருந்த 30 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகளை தனியே பிரித்து வெடிக்கச்செய்தனர்.

இந்த கார் இப்போது டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதே போல தீவிரவாதிகளில் பைகளில் கொண்டு வந்த குண்டுகளும் தேடி எடுக்கப்பட்டு வெடிக்கப்பட்டன. இருகையெறி குண்டுகளும் செயலிழக்கச் செய்யப்பட்டன.

நாடாளுமன்றத்தின் எங்குமே குண்டுகளோ, துப்பாக்கிகளோ இல்லை என்பதை அதிகாலை 3 மணிக்கு ராணுவம்உறுதி செய்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X