பொடோவின் சேவை கட்டாயம் தேவை: பன்னீர்
சென்னை:
நாடாளுமன்றம் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து, பொடோ சட்டத்தை அமல்படுத்துவது தவிர்க்கமுடியாததாகிவிட்டது தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எல்லாக் கட்சிகளின் சம்மதம் பெற்றுத்தான் பொடோ சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று முன்பே அதிமுகசெயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஆனால் தற்போது நாடாளுமன்றமே தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதையடுத்து, உடனடியாக பொடோவைத்தாக்கல் செய்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
நாடாளுமன்றம் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். தீவிரவாதத்துக்கு எதிராக கட்சிப் பாகுபாடின்றிஅனைவரும் ஒன்று கூடி போராட வேண்டும். தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு எதிராக ஊழல் வழக்குக்கு தேவையான ஆதாரங்களைத் தேடிவருகிறோம். தகுந்த ஆதாரம்கிடைத்தவுடன் அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்பன்னீர்செல்வம்.