For Quick Alerts
For Daily Alerts
Just In
எஸ்.டி.எஸ். கட்சி தனித்தே இயங்கும்
சென்னை:
மறைந்த எஸ்.டி.சோமசுந்தரம் நிறுவிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அதிமுக தனித்தே செயல்படும்,அதிமுகவுடன் சேராது என்று அக்கட்சியின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
எஸ்.டி.எஸ். நிறுவிய இந்தக் கட்சியை அதிமுகவுடன் சேர்க்க வேண்டும் என்று இறப்பதற்கு முன் எஸ்.டி.எஸ்.கூறியதாக செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து அதிமுகவுடன் இணைப்பதாக கட்சியின் கூட்டத்திலும்தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் இப்போது கட்சியின் சில நிர்வாகிகள் இணைந்து கட்சியை தனித்தே நடத்துவது என முடிவுசெய்துள்ளார்களாம். அதிமுகவுடன் சேராமல் தனித்தே கட்சி இயங்கும் என்று கட்சி நிர்வாகிகள் ராமநாதன்,தியாகராஜன் ஆகியோர் கூறியுள்ளனர்.
மாவட்ட தலைவர்களின் கூட்டத்திற்கு வருகிற 30ம் தேதி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Sunday, September 1, 2002, 5:30 [IST]